Posts

வாயு புராணம் (சிவ புராணம்) - 22

 சுதநிகாவும்..சகஸ்ரநிகாவும் ------------------------------------------ மன்னன் சுதநிகா தினமும் அந்தணருக்கு தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என நினைத்து நூற்றுக்கணக்கான பொற்காசுகளை தானம் செய்தான்.இதனிடையே அவன் இறந்துவிட அவன் மகன் சகஸ்ரநிகா பட்டத்துக்கு வந்தான்.அவன் தகப்பனைப் போல தானம் செய்வதை நிறுத்தி விட்டான்.வருமானம் இழந்த அந்தணர்கள் மன்னனிடம் சென்று..உங்கள் தந்தை எங்களுக்கு தானம் செய்து பெரும் புண்ணியத்தைத்  ட்ஹேடிக் கொண்டு விட்டார்.நீ ஏன் அவ்வாறு செய்யவில்லை? என்று கேட்டனர்.சகஸ்ரநிகா அவர்களைப் பார்த்து..தானத்தைப் பெற்றுக் கொண்டு என் தந்தைக்கு புண்ணியம் தேடித் தந்தீர்களே..இப்போது என் தந்தை எங்கிருக்கீறார்?என்று சொல்ல முடியுமா? என்றான்.அது முடியாது என்றதும்  மன்னனை எப்படியாவது திருப்தியடைய வைக்க வேண்டும் என்பதற்காக..பார்க்கவ முனிவரிடம் சென்ற அந்தணணர்கள்..இறந்த அரசன் எங்கிருக்கின்றான் என்பதை அவர் தன் தவ வலிமையால் அறிந்து சொல்லுமாறு வேண்டினர்.பார்க்கவ முனிவர் சூரியனின் உதவியை நாட, சூரியன் அவரை நரகத்திற்கு அழைத்துச் சென்றான். வழியில் ஒரு அந்தணன் பார்க்கவரைத் தடை செய்தான்."நான் இறப

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

  யமன் சொல்லிய கதை -------------------------------- ஒருமுறை பிரம்மாவின் மகனாகிய சனத்குமாரன், யமனைக் கண்டு பேசி விட்டுப் போக வந்தான்.அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது பொன்னிற விமானத்தில் ஒருத்தர் வந்தார்.உடன் யமன் எழுந்து மிக்க மரியாதையுடன் அவரைக் குசலம் விசாரித்து..பிரம்மலோகத்தில் உங்கள் இடம் தயாராக உள்ளது..நீங்கள் அங்கே போகலாம் என வழி அனுப்பிவிட்டு வந்து அமர்ந்தான்.உடன், மற்றொரு விமானத்தில் இன்னொருவர்  வந்தார்.மறுபடியும் யமன் அவரை வரவேற்று பிரம்மலோகம் அனுப்பினார்.இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட சனத்குமாரன், "யமனே! உன்னைக் கண்டு அனைவரும் அஞ்சுகின்றனர்.ஆனால்..உன்னிடம் வந்த இருவருக்கு இவ்வளவு மரியாதை செய்வது எனக்கு ஆச்சரியமளிக்கிறது" என்றான். வைதிஷா என்ற நகரத்தை தாரபாலா என்ற மன்னன் ஆண்டு வந்தான்.அவன் நாட்டில் ஓடும் விதஸ்தா என்ற நதியும், வேத்ரவதியும் சங்கமாகும் இடத்தில் ஒரு சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து..ஒரு சிறு நரி பூஜை  செய்து வந்தது. கயிலையில் பார்வதி தவம் செய்தபோது சிவனிடம் வேறு யாரும் தன்னைப் பொல வேஷமிட்டபடி நெருங்காமல் இருக்க ஏவி விட்டு பார்வதி சென்று விட்டாள்.அதி என்ற அசுரன் பா

வாயு புராணம் (சிவ புராணம்) - 20

 ருருவின் கதை ----------------------- ருரு என்றொரு அரக்கன் இருந்தான்.அவன் தற்செயலாக ஒருநாள் பார்வதியைப் பார்த்து விட்டான்.பின், அவளையே மணக்க வேண்டும் என கடுந்தவம் இருந்தான்.தவத்தின் முடிவில் வந்த பிரம்மன் "என்ன வரம் வேண்டும்" எனக் கேட்டார்.ருருவும், "நான் பார்வதையை மணந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றான். இது என்னால் முடியாத காரியம் என பிரம்மா சென்றூவிட..ருருவின் தவம் தொடர்ந்தது.தவத்தின் கடுமையால்..வெளிப்பட்ட உஷ்ணம் சுற்று வட்டாரத்தையே எரித்தது.ருரு தவம் இருந்த மலையம் என்ற மலையும் எரியத் தொடங்கியது. அந்தச் சூடு மேருவைத் தாக்க...சிவனும், பார்வதியும் கூட ஓட வேண்டியதாயிற்று.அப்போது பார்வதி சிவனைப் பார்த்து, "நாம் ஏன் ஓடுகிறோம்?" என்றாள்.சிவன், ருரு என்ற அரக்கன் உன்னை மணந்து கொள்ள வேண்டி தவம் இருக்கின்றான்.அதனால்தான் இப்படி..என்றார்.அதற்கு பார்வதி, "இதற்கு ஏதாவது செய்யுங்கள்" என்றாள்.  உடன் சிவன், "இது உன் சம்பந்தமான விஷயம்.நீதான் ஏதாவது செய்ய வேண்டும்"என்று கூறியதும்..பார்வதி சுற்று முற்றும் பார்த்தாள்.ஒரு சிங்கமும், யானையும் சண்டையிட

வாயு புராணம் (சிவ புராணம் ) - 18

 அந்தகாசுரன் கதை ------------------------------- ஒருநாள் சிவன் தனியே அமர்ந்து கொண்டிருந்தார்.அவருக்குத் தெரியாமல் பின்புறமாக வந்த பார்வதி அவரது இரண்டு கண்களையும் பொத்திவிட்டாள்.சிவனின் கண்களைப் பொத்தியதால் பார்வதியின் உடலில் ஏற்பட்ட உஷ்ணத்தால்..வியர்வைத் துளிகள் கீழே விழுந்தன. அந்த வியர்வைத் துளிகள் எல்லாம் ஒன்று கூடி அரக்கனாக உருவாகிக் கூப்பாடு போட்டது.சிவன் கண் விழித்து "யார் உறுமுவது?"எனக் கேட்டார்.கரிய அரக்கன் ஒருவன் கண்கள் இன்றி இங்கும் அங்கும் அலைந்தான்.சிவனது கண்கள் பொத்தப்பட்ட  நிலையில் இந்த அரக்கன் பிறந்ததால்,அந்தகனாகவே இருந்தான்.அவனுக்கு அந்தகாசுரன் என்ற பெயர் நிலைத்தது. ஹிரண்ய நேத்திரன் என்ற அரசன் தனக்கு ஒரு மகன் வேண்டும் என சிவனைக் குறித்து தவமிருந்தான்.சிவன் தோன்றி,"உனக்கு பிள்ளைப் பிறக்கும் பாக்கியம் இல்லை.எனவே அவ்வரத்தைத் தர முடியாது.என்றாலும் அந்தகனாகப் பிறந்த அசுரன் என்னுடன் இருக்கின்றான்.அவனை வேண்டுமானால்..நீ பிள்ளையாக எடுத்து வளர்க்கலாம்" என்று சொன்னார்.ஹிரண்ய னேத்திரன் மிகவும் மகிழ்ச்சியுடன் அந்தகாசுரனை எடுத்து வளர்த்தான். ஹிரண்ய நேத்திரன், சிவனை

வாயு புராணம் (சிவ புராணம்) - 19

 உபமன்யுவின் கதை -------------------------------- முன்னொரு காலத்தில் வியாக்ர பாதர் (புலிக்கால்  முனிவர்) என்ற முனிவர்க்கு உபமன்யு என்ற ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை வளர்ந்த பொழுது,தனக்கு பால் கொடுக்க வேண்டும் என அழுதது.தாய்ப்பால் போன்ற ஒரு பொருளைக் கொடுத்தால், குழந்தை அதைச் சாப்பிட்டுப் பார்த்து தந்தையிடம் சென்று இது பாலில்லை...பாலின் ருசி இதில் இல்லை என அடம் பிடித்தது.அப்போது உபமன்யுவின் தாய்,"நானே வறுமியயில் வாடுகிறேன்..பாலுக்கு எங்கே போவேன்?அரிசிக் கஞ்சிதான்  தந்தேன்" என்றாள்.உபமன்யு உடன், சிவனைக் குறித்து தவம் செய்து பாலைப் பெறுவேன்.போகிறேன்..எனச் சொல்லி சிவனை வேண்டி தவம் இருந்தார்.சிவன் நேரில் வந்து ஒரு மந்திரத்தையும்..ஆபத்து நேர்ந்தால் காத்துக் கொள்ள  அகோராஸ்திர மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்து அனுப்ப உபமன்யு இமயமலையில் ஒரு பகுதிக்குச் சென்று தவத்தைத் தொடங்கினான்.அரக்கர்களும், அசுரர்களும் எவ்வளவோ முயன்றும் தவத்தைக் கலைக்க முடியவில்லை.இறுதியில் அவனை சோதனை செய்வதற்காக சிவன் இந்திரன் வடிவத்தில் அவன் முன் தோண்றினான்.உபமன்யு கண்விழித்து, "தேவர் தலைவனே! என்னை வந்து பார்த்

வாயு புராணம் (சிவ புராணம்) - 17

 சந்திரசேகரன் ------------------------   பார்வதி முற்பிறவியில் சதி என்ற பெயருடன் தட்சனின் மகளாய் பிறந்திருந்தாள்.தட்சன் யாகத்திற்குச் சென்ற சதி அவனால் அவமானப்படுத்தப்பட்டு அங்கேயே உயிர் நீத்தாள்.சதியை இழந்த  சிவன் கடும் தவம் மேற்கொண்டார்.அந்த கடுமையான தவத்தால் மரம், செடி,கொடிகள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.மலைகளும் இதில் அடக்கம். தேவர்கள் அனைவரும் கூடி பிரம்மனிடம் சென்று ஏதேனும் செய்யும்படி வேண்டினர்.பிரம்மன், சந்திரனை அமுத கலசத்துக்குள் போட்டு..அந்தக் கலசத்தையும்..வேறு ஒரு கலசத்தில் விஷத்தையும் நிரப்பிக் கொண்டு சிவனிடம் சென்றார்.சிவனிடம் இரண்டு கலசங்களையும் கொடுத்து..ஏதும் மறுப்பு சொல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.சிவன் முதலில் அமுத கலசத்தை எடுத்து குடித்தார்.அதில் இருந்த சந்திரன் திடீரென சிவனின் நெற்றியில் ஒட்டிக் கொண்டு அவரை குளிர்ச்சியடையச் செய்தான்.விஷக்கலசத்தில் ஒரு விரலை நனைத்துக் கொண்டு சிவன் தொண்டையைத் தொட்டார்.உடன் அந்த இடம் நீல நிறமாக மாறியது.அதிலிருந்து சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் வரலாயிற்று.நெற்றியில் ஒட்டிய சந்திரன் ஒரு அணியைப் போல இருந்ததால் அவருக்கு சந்திரசேக

வாயு புராணம் (சிவ புராணம்) - 18

 கௌரியின் கதை --------------------------- பார்வதி கருநீல நிறத்தில் இருந்தாள்.சிவன் அவளைக்   காளி என்றே அழைத்தார்.பார்வதிக்கு இது பிடிக்கவில்லை.நான் கறுப்பாய் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறீர்கள்..என்னை விரும்புவது போல பாசாங்கு செய்து என்னை ஏன் மணந்து கொண்டீர்கள்? நான் பிரம்மனை நோக்கித் தவம் இருந்து இந்த நிறத்தை மாற்றிக் கொள்கீறேன் என்று பிரம்மனை நோக்கித் தவம் இருந்தாள்.பிரம்மன் தோன்றி, "என்ன வேண்டும்?" என வினவ..என் நிறத்தை ஒழித்துவிட்டு நான் கௌரியாக வேண்டும்" என்றாள். பிரம்மன் வருவதற்கு முன் பார்வதியின் எதிரே ஒரு கொடிய புலி அவளை உண்ணும் எண்ணத்துடன் அமர்ந்திருந்தது.தன்னிடம் அது அன்பு பாராட்டுவதாக எண்ணி பார்வதி மகிழ்ச்சியுடன் புலியின் உடம்பினுள் பிரவேசித்தாள்.அவளுடைய சக்தி உள்ளே புகுந்ததால் புலி மிகவும் சதுவாக மாறி அவளுடன் இருந்து விட்டது. பிரம்மன் பார்வதியைப் பார்த்து, "நீ விரும்பியதை அடைவாய்" என்றார்.பார்வதியின் உடலில் இருந்த கறுப்பு நிறம் உதிர்ந்து விட்டது.அக்கறுப்பையெல்லாம் திரட்டி பிரம்மன் எடுத்துக் கொண்டார்.  அவர் வேண்டியதும் அதுதானே! காரணம் இரண்டு அரக்கர்கள