விஷ்ணு புராணம் - 2

 தொடக்கத்தில் எங்கும் நீர் நிறைந்திருந்தது.அதில் பெரிய முட்டை ஒன்று இருந்து கொண்டிருந்தது.முட்டையினுள் இந்த உல்கத்தில் நாம் காண்கின்ற..சர,அசரப் பொருள்கள் எல்லாம் வகைக்கு ஒன்றாக இருந்தன.அவற்றோடு சேர்ந்து விஷ்ணுவும் அதனுள் இருந்தார்.வெளியே ஆகாயம்,காற்று முதலிய ஐந்தும் இருந்தன.பூமி நீருக்கடியில் பாதாள ளோகத்துடன் சேர்ந்து இருந்தது.பூமியை மேலே கொண்டு வர விரும்பி விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பாதாள லோகத்திற்குச் சென்றார்.அங்கிருந்த பூமி தன்னை விடுவிக்குமாறு வேண்டியது.பூமியை எடுத்துத் தன் இரண்டு தந்தங்கள் நடுவே வைத்துக் கொண்டு மேலே வந்த விஷ்ணு பூமியை நீரில் மிதக்க விட்டார்.நீரில் மிதந்துக் கொண்டிருந்த காரணத்தால் நாராயணன் என்றப் பெயரைப் பெற்றார் விஷ்ணு.பிரம்மன் விஷ்ணுவைத் தாங்கி உலகத்து உயிர்களையெல்லாம் படைக்கத் தொடங்கினார்.


முதலில் படைக்கப்பட்டவர்கள் அவர்கள் வாயிலிருந்து வந்த தேவர்களும், தொடையிலிருந்து வந்த அசுரர்களும் விலாவிலிருந்து பிறந்த பிறர்களும் ஆவர்.படைக்கப்பட்ட யட்சர்கள் படத்தி பிரம்மனையேத் தின்ன முற்பட்டனர்.ஆனால்..அவ்வாறு செய்யக் கூடாது என ராட்சதர்கள் தடுத்தனர்.இதன் பிறகு பிரம்மனின் தலையில் இருந்து விழுந்த ரோமத்தில் கந்தர்வர்கள் தோன்றினர். பிரம்மனின் நெற்றியில் இருந்து செம்மறி ஆடுகளும்,நாபியிலிருந்து வெள்ளாடுகளும்,வயிற்றிலிருந்து கால் நடைகளும் ,பாதத்திலிருந்து யானை,குதிரை, மான்,ஒட்டகம் ஆகியவையும் உண்டாயின.


ருத்திரனின் தோற்றம்

--------------------------

ஒரு காலத்தில் பிரம்மா தனக்கு ஒரு அழகிய புத்திரன் வேண்டும் என நினைத்தார்.உடன் அவர் மடியில் ஒரு அழகிய ஆண் குழந்தை ஒன்று கிடந்தது.ஆனால்..குழந்தை ஓயாது அழுதுக் கொண்டிருந்தது.அழும் அக்குழந்தையின் அழுகை நிறுத்த வேண்டுமானால் தனக்கு ஒரு பெயர் சூட்டப்பட வேண்டும் என்றது.நான்முகனும் அக்குழந்தைக்கு ருத்திரன்  எனப் பெயரிட்டார்.சிறிது நேறம் மகிழ்ச்சியில் இருந்த குழந்தை மீண்டும் அழத் தொடங்கி விட்டது.அக்குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை.புதிது புதிதாகப் பெயர் சூட்டியும் அழுகையை நிறுத்த முடியவில்லை.ஏழாவது பெயர் சூட்டப் பட்டதும் அழுகை நிண்றது.பிரம்மன், ருத்திரனுக்குச் சூட்டிய ஏழு பெயர்கள்...

பவ,சர்வ,மகேச,பசுபதி,பீம,உக்ர , மகாதேவ ஆகும் .ருத்திரன் சதி என்பவளை மணந்து கொண்டான்.சதியின் தந்தையாகிய தட்சன் செய்த யாகத்தில் ருத்திரனை அவமானம் செய்தான்.அதனால் சதி உயிரை விட்டு மறுபடியும் உமா என்ற பெயருடன் இமயமலை மகளாகப் பிறந்தாள்.அவளை விரும்பி ருத்திரன் மணந்து கொண்டார்.

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11