வாயு புராணம் (சிவ புராணம்) - 14
ஜோதிர்லிங்கங்கள் ---------------------------------- 1) சோமநாதர் ------------------------ தட்சனின் 27 பெண்களை மணந்து கொண்ட ச்னஹ்திரன், ரோகிணியின் மீது மட்டும் அதிக அளவில் அன்பு செலுத்தி வந்தான்.இதனால் மற்றவர்கள் மனம் வருந்தினர்.அவர்கள் தட்சனிடம் சென்று முறையிட்டனர்.தட்சனும் சந்திரனிடம்..எல்லோரிடமும் சமமாக நடந்துக் கொள்ளுமாறுக் கூறினான்,.இப்படி பலமுறை எச்சரித்தும் சந்திரன் அதைக் காதில் வனகிக் கொள்ளவே இல்லை.இதனால் கோபம், அடைந்த தட்சன்,"நீ தேய்ந்து போவாயாக" என சாபமிட்டான்.பயந்து போன சந்திரன் பிரம்மனிடம் முறையிட்டான்..பிரம்மன், "உனக்கு உதவும் சக்தி எனக்கில்லை.நீ சிவனிடம் சென்று முறையிடு"என்று கூற..சந்திரன் சரஸ்வதி நதியின் கரையில் பிரபச தீர்த்தத்தில் ஒரு லிங்கம் அமைத்து ஆறுமாதங்கள் தீவிரமாக வழிபட..சிவன் நேரில் தோன்றி,"என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்டார். சோமன், நடந்ததையெல்லாம் கூறி,தன்னைக் காக்கும்படி வேண்டினான். செய்த தறுக்கு கொடுத்த தண்டனையை போக்க முடியாது என்ற சிவன்.."இதற்கு ஒரு வழி சொல்கிறேன்..கிருஷ்ணபட்சம் 14 நாட்கள் உன் மாமனார் சாபப்படி நீ தேய்ந்