விஷ்ணு புராணம் - 24
பிரளயங்கள் ----------------- மூன்று வகையான பிரளயங்கள் உண்டு.முதலாவது பிரளயம், பிரம்மனின் ஒரு நாள் கழிந்தவுடன் நடைபெறுவதாகும்.இதற்கு நியமித்திக்க பிரளயம் என்று பெயர்.இந்த பிரளயம் தொடங்குவதற்கு முன்னர் நூறு ஆண்டுகள் மழை என்பதே இல்லை..இப்போது விஷ்ணு ருத்ர சொரூபம் எடுத்து ஆறு,கடல் எல்லாவற்றிலும் உள்ள நீரைக் குடித்து விடுவார்.சூரியனு ய கிரணங்களும் தனித்தனியாக ஒரு சூரியன் போலவே இருந்து நிலத்தைக் கொளுத்தும்.இந்த சூரிய கிரணங்கள் இந்த பூலோகத்தை அல்லாமல், யுவர்,புவர்,சுவர் ஆகிய மூன்று லோகங்களையும் கொளுத்திவிடும்.இதன் பிறகு சூரிய மேகங்கள் சூழ்ந்து நூறு வருடங்கள் வரை விடாது மழை பெய்யும்.மறுபடியும் உல்காம் தோற்றுவிக்கப்படும் வரை விஷ்ணு தண்ணீரிலேயே மிதந்து உறங்கிக் கொண்டிருப்பார். இரண்டாவது பிரளயம், பிரகிருத பிரளயம் எனப்படும்.தாமசம்,ராஜசம்,சத்துவம் ஆகிய மூன்று குணங்களும் தம்முள் அளவொத்து இருப்பது பிரகிருதி எனப்படும்.பிரளய காலத்தில் பிரகிருதி ,பரமாத்மாவிடம் சென்று அடங்கிவிடும்.இதுவே பிரகிருத பிரளயம் எனப்படும். மூன்றாவது பிரளயம்,அத்யதிக பிரளயம் எனப்படும்.ஆதி ஆத்மீகம்,ஆதிதைவிகம்,ஆதிபௌதிகம் என்று சொல்