விஷ்ணு புராணம் - 9
யாக்ஞவல்கியர் கதை ------------------------------- ஒரு காலத்தில் அனைத்து ரிஷிகளும் ஓரிடத்தில் கூடினர்.பெரிய ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டியிருந்ததால் ,அனைவரும் அக்கூட்டத்திற்கு வர வேண்டும்,அப்படி யாராவது வராமல் இருந்து விட்டால்..எட்டாவது நாள் ஒரு பிராமணனைக் கொன்ற பாவம் அவர்களைச் சென்றடையும் என ரிஷிகள் அறிவித்தனர். என்ன காரணத்தாலோ வைசம்பாயன மகரிஷியால் இக்கூட்டத்திற்கு வர முடியவில்லை.யாக்ஞவல்கியர் உள்ளிட்ட இருபத்தேழு சீடர்களுக்கு யஜூர் வேதத்தை இருபத்தேழு பங்குகளாகப் பிரித்து அவர் கற்றுத் தந்தி ருந்தார்.கூட்டத்திற்கு வராததால் எட்டாம் நாள் வைசம்பாயனர் தவறுதலாக அவர் மைத்துனர் தலையில் காலை வைத்து அவரைக் கொன்று விட்டிருந்தார்.இந்த பிரம்மஹத்தித் தோஷத்தைப் போக்க விரும்பிய வைசம்பாயனர் தன் இருபத்தேழு சீடர்களையும் அழைத்து ,இந்த தோஷம் தன்னை விட்டு அகல வேண்டுமானால் ஒரு யாகம் செய்ய வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லியும் சொன்னார். இதைக் கேட்டதும் அந்த இருபத்தியேழு பேரில் ஒருவரான யாக்ஞவல்கியர் எழுந்து "யாகத்தை நன்கு செய்து முடிக்க இவர்களுக்கு ஆற்றல் போதாது.நான் ஒருவனே இந்த யாகத்தை ச