விஷ்ணு புராணம் - 24

 பிரளயங்கள்

-----------------

மூன்று வகையான பிரளயங்கள் உண்டு.முதலாவது பிரளயம், பிரம்மனின் ஒரு நாள் கழிந்தவுடன் நடைபெறுவதாகும்.இதற்கு நியமித்திக்க பிரளயம் என்று பெயர்.இந்த பிரளயம் தொடங்குவதற்கு முன்னர் நூறு ஆண்டுகள் மழை என்பதே இல்லை..இப்போது விஷ்ணு ருத்ர சொரூபம் எடுத்து ஆறு,கடல் எல்லாவற்றிலும் உள்ள நீரைக் குடித்து விடுவார்.சூரியனு ய கிரணங்களும் தனித்தனியாக ஒரு சூரியன் போலவே இருந்து நிலத்தைக் கொளுத்தும்.இந்த சூரிய கிரணங்கள் இந்த பூலோகத்தை அல்லாமல், யுவர்,புவர்,சுவர் ஆகிய மூன்று லோகங்களையும் கொளுத்திவிடும்.இதன் பிறகு சூரிய மேகங்கள் சூழ்ந்து  நூறு வருடங்கள் வரை விடாது மழை பெய்யும்.மறுபடியும் உல்காம் தோற்றுவிக்கப்படும் வரை விஷ்ணு தண்ணீரிலேயே மிதந்து உறங்கிக் கொண்டிருப்பார்.


இரண்டாவது பிரளயம், பிரகிருத பிரளயம் எனப்படும்.தாமசம்,ராஜசம்,சத்துவம் ஆகிய மூன்று குணங்களும் தம்முள் அளவொத்து இருப்பது பிரகிருதி எனப்படும்.பிரளய காலத்தில் பிரகிருதி ,பரமாத்மாவிடம் சென்று அடங்கிவிடும்.இதுவே பிரகிருத பிரளயம் எனப்படும்.


மூன்றாவது பிரளயம்,அத்யதிக பிரளயம் எனப்படும்.ஆதி ஆத்மீகம்,ஆதிதைவிகம்,ஆதிபௌதிகம் என்று சொல்லப்படும் மூன்றுவகத் துன்பம்களும் மறைந்துவிடும் சூழ்நிலை ஏற்படும்.ஆதி ஆத்மிகம் என்பது உடம்பைப் பற்றும் நோய்களாகும்.ஆதிதைவிகம் என்பது குளிர்ச்சி, சூடு என்பவற்றால் ஏற்படுவதாகும்.ஆதி பௌதிகம் என்பது பிற உயிர்களால் வரும் துன்பங்கள் ஆகும்.மூன்றாவது பிரளயத்தில் சொல்லப்பட்ட அனைத்தும் போய்விடும்.


விஷ்ணு புராணத்தின் இறுதி பகுதி புராணம் யரைடம் தோன்றி..யார்..யார்..மூலமாக யார்  ..யரௌக்குக் கிடைத்தது என ஒரு பெரிய பட்டியலைப் போட்டுக் காட்டி பிரம்மனிடம் தொடங்கி மைத்ரேய முனிவர் வரை விஷ்ணு புராணம் சொல்கிறது.


(விஷ்ணு புராணத்தில் காணப்படும் ஒரு முக்கியமான செய்தி..மற்ற புராணங்களில் நாங்கு வர்ணத்தைப் பற்றிக் கூறி,சூத்திரர்கள் தாழ்ந்த பிறப்பினர் என்று கூறின.பெண்கள் ஒருவரது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளார்கள் என்றும் கூறின.இதற்கு எதிராக விஷ்ணு புராணம் சொல்கிறது)  


ஒருநாள் பா முனிவர்கள் குடி வேதவியாசரை சந்திக்கச் சென்றார்கள்.அவர்கள் வருகின்ற நேரம் வேதவியாசர் கங்கையில் குளீத்துக் கொண்டிருந்தார்.சில முக்கியமான செய்திகளைக் கேட்கத்தான் அவர்கள் வருகிறார்கள் என்பதைத் தன் ஞானதிருஷ்டியால் அறிந்த வேதவியாசர்..அவர்கள் காதில் விழும்படியாக :சூத்திரர்கள் உயர்ந்தவர்கள்.பெண்கள் உயர்ந்தவர்கள்.கலியுகம் மிக உயர்ந்தது"எனக் கூறினார்.அவர் குளித்து கரைக்கு வந்ததும்..அவர் கூற்றைக் கேட்டு குழம்பிய முனிவர்கள்.."நாங்கள் இதுவரை கேள்விப்பட்டது வேறாக இருக்கிறதே!கலியுகம் மோசமானது.சூத்திரர்கள் தாழ்ந்த பிறப்பினர் என்று கேள்விப்பட்டிருக்கிறோமே..எங்கள் சந்தேகத்தை போக்க வேண்டும்"என்றார்.


(விஷ்ணு புராணம் முடிந்தது.அடுத்து சிவ புராணம்)


வேதவியாசர் சொன்னார்


"சத்தியயுகம்..முதலியவற்றில் எல்லோரும் நேர்மை உடையவர்களாகவும்,அந்தந்த வர்ணத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒழுக்கங்களைப் பின் பற்றுபவ்ர்களாகவும் இருந்தார்கள்.கலியுகத்தில் இந்த ஒழுங்குமுறைகளைப் பின் பற்றி நடப்பது முதல் மூன்று வர்ண்த்தாருக்கும் கடினமாக உள்ளது.ஆடம்பரம்,செல்வச் செருக்கு,அதிகாரம் என்பவற்றில் சிக்கிய மூன்று வர்ணாத்தாரும்..இத்தனையும் மீறி தம் வர்ணத்தாருக்கு வகுக்கப்பட்ட வழிகளில் செல்வது முடியாத காரியமாகும்..ஆனால், சூத்திரரகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு என தனியாக எந்தக் கடமையும் வகுக்கப்படவில்லை.ஆகவே அவர்கள் வேளாண்மை முதலிய தொழில்களில் ஈடுபட்டு,பணி புரிந்து பிற்ரௌக்கு உபயோகமான வாழ்க்கையையும்,எளிமை நிறைந்த வாழ்க்கையையும் கைக்கொள்கிறார்கள்.இவ்வாறு செய்வதாலேயே கடமையிலிருந்து தவறிய மற்ற மூன்று வர்ணத்தாரர்களை விட உயர்ந்து விடுகிறார்கள்.ஆகவே இவர்கள் உயர்ந்தவர்கள் எனக் கூறினேன்.   


பெண்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு எனத் தனியாக எதையும் செய்ய வேண்டியதில்லை.அவர்கள் கணவன்மார்களுக்கும், குடும்பத்திற்கும் வேண்டியதைத் தன்னலம் இல்லாமல் அன்போடு செய்வதால் ஏனியயோரைவிட அவர்கள் உயர்ந்துவிடுகிறார்கள்.


அனைவரும் செம்மையாக நடந்து கொள்ளும் மற்ற யுகங்களில் தனிப்பட்ட ஒருவர் கொடுமையாக நடந்து கொள்கிறார் என்றால் சிறப்பில்லை.ஆனால் பலரும் கடமை மறந்து செல்வச் செருக்கில் ஈடுபட்டு பிறருடைய நன்மையைக் கருதாமல் வாழ்கின்ற இந்த கலியுகத்தில் ஒரு சிலர் பண்புடன் வாழ்ந்தால் தனியாக சிறப்பிக்கப் படுகின்றனர்.அதனால்தான் கலியுகம் சிறந்தது எனக் கூறினேன்"

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11