வாயு புராணம் (சிவ புராணம்) - 1

 வாயுபுராணம்..எனப்படும் சிவ புராணம் மிகப் பழமையான புராணங்களில் ஒன்று.இதில் 24000 பாடல்கள் இருப்பதாக ஸ்கந்தம் சொல்கிறது.பதினெட்டு மகா புராணங்களில் இதுவும் ஒன்று.இந்த புராணம் நட்சத்திரங்களை எண்ணுவதில் கிருத்திகியயில் ஆரம்பித்து பரணியில் முடிகிறது.கிமு 550ல் இருந்த கார்காவின் காலத்திலிருந்து அஸ்வினியை முதலாக வைத்து எண்ணும் வழக்கம் ஏற்பட்டதால்,சிவ புராணம் அதற்கும் முற்பட்டது என எண்ண இடமுண்டு.புராணங்களுக்குரிய ஐந்து பொருள்களைப் பற்றி இதுவும் பேசுகிறது.


இப்புராணத்தில் காணப்படும் பல பாடல்கள் மார்க்கண்டேய புரானத்திலும் காணப்படுகின்றது.ஸ்கந்த புராணம் இதில் 24000 பாடல்கள் உண்டு எனக் கூறினாலும்,இப்போது நமக்குக் கிடைக்கும் வாயு புராணத்தில் 12000 பாடல்களே உள்ளன.இது நான்கு எரும் பாசுரங்களையும் 112 அதிகாரங்களையும் கொண்டது. 


பாகவத யோக்ம பற்றியும் இப்புராணம் பேசுகிறது.இப்புராணத்தில் விஷ்ணுவாகிய தானும்,பிரம்மனும் தெய்வங்கள் என்றாலும் சிவனே எல்லாவற்றிலும் மூலமாக உள்ளார் என்றும்..விஷ்ணூவாகிய தாமும்,பிரம்மனும் சிவனிடத்தில் இருந்தே தோன்றினர் என்றும், விஷ்ணு பிரம்மனுக்குக் கூறுவதாக இப்புராணம் சொல்கிறது.மனித குலத்தின் நன்மைக்காகவே சிவன் உள்ளார் என்றும்,சிவன் என்ற பெயருக்கு மங்களம்,நன்மை செய்பவர் என்றும் பொருளுண்டு என இப்புராணம் சொல்கிறது.


நைமிசாரண்ய வனத்தில் கூடியிருந்த முனிவர்கள் லோமஹர்ஷனரைச் சந்தித்து "முனிவரே! வேத வியாசரிடத்தில் நேரிடையாகப் புராணங்களைக் கற்கும் பாக்கியம் பெற்றவர் நீங்கள்.இதுவரை தாங்கள் பலவற்றைச் சொல்லியும்,மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும்,பலவற்றைத் தெரிந்து கொள்ளவில்லையே என்ற எண்ணமும் எங்களை வாட்டுகிறது.சிவனைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை"என்று சொன்னதும், லோமஹர்ஷனர் "ஏனக்குத் தெரிந்த அனைத்தும்  ஒவ்வொன்றையும் மறைக்காமல் உங்களுக்குச் சொல்கிறேன்"என்று சொல்லிவிட்டு பின் வருமாறு பேசத் தொடங்கினார்.


வெகு காலத்திற்கு முன் பிரம்மனின் புத்திரனாகிய நாரதர் தன் தந்தையைப்  சிவபெருமானைப் பற்றித் தெரிந்து  கொள்ள வேன்டும் என்று கூறினார்.பிரம்மனும் நாரதருக்குக் கூறியதைச் சொல்கிறேன். 


பிரபஞ்சத் தோற்றத்தின்போது எங்கும் நீர் நிறைந்திருந்தது.அதில் விஷ்ணு படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.அவர் தொப்ப்ளில் இருந்து பொன்னிறத்துடன் ஜொலிக்கும்  தாமரைத் தண்டு ஒன்று மிகவும் உய்ரந்து நின்றது.ஆயிரக்கணக்கான இதழ்களைக் கொண்ட அத்தாமரையில் பிரம்மன் இருந்தான்.அந்த பிரம்மன், தான் யார்..எங்கு இருக்கிறேன்.ஏன் இங்கு இருக்கிறேன் என்று சுற்றுமுற்றும் பார்த்து ஆராயத் தொடங்கினான்.மெதுவாக அத்தாமரைத் தண்டினைப் பிடித்து கீழே இறங்கிய பிரம்மன் அதைச் சுற்றித் தேடினான்.தாமரைத் தண்டின் தொடக்கத்தைக் காணவில்லை.இப்பொழுதுதான் தாமரைப் பூவின் தான் பிறந்த நடுப்பகுதியியத் தேட முயன்றான்.தான் புறப்பட்ட இடத்தை அடையமுடியவில்லை.களைத்துப்போன பிரம்மன் ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டான்.அப்போது"பிரம்மனே! தவம் செய்" என ஒரு குரல் ஒலித்தது.


யார் அக்குரலுக்குரியவர் என தெரியாவிட்டாலும் பிரம்மன் 12 ஆண்டுகள் தவம் செய்தான். தவம் முடிந்த்தும் விஷ்ணு எதிரே வந்தார். விஷ்ணுவைப் பார்த்த பிரம்மன் "நீ யார்?" எங்க கேட்க..


"என்  கைகளைப்பார்.சங்கு, சக்கரம்,கதாயுதம்,தாமரை ஆகியவற்றை நாங்கு கைகளிலும் ஏந்திக் கொண்டிருக்கும் என்னைத் தெரியவில்லையா? நாந்தான் விஷ்ணு.என்னுடைய உடம்பிலிருந்துதான் நீ  தோன்றினாய்"என்றார்.அந்த வார்த்தைகளை நம்பாத பிரம்மன், விஷ்ணுவிடம் சண்டையிடத் தொடங்கினான்.

p

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11